யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புதிய அலுவலகத்தை அமைப்பதற்கான தீர்மானத்தை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் அறிவித்தார். குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும், நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.