முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக சேர்க்க உச்ச நீதிமன்றம் அனுமதி



தேஷ்பந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்ததற்கு எதிராக இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தால்  தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (29) உச்ச நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக சேர்க்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


மனு பிரேரணை மூலம் அழைக்கப்பட்ட போது, மனுதாரரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிட அனுமதி கேட்டார். 


இதற்கான அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிட அனுமதித்த மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு, மனுவை வரும் நவம்பர் 11ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post